மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா

0
2482

நட்சத்திர தம்பதிகளான பார்த்திபனும், சீதாவும் பல வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இவர்கள் மகள் கீர்த்தனாவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது. கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர்.

தற்போது மணிரத்னம் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படம் டைரக்டு செய்ய திட்டமிட்டு உள்ளார். இவருக்கும் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். திருமணத்தில் நடிகை சீதா கலந்து கொள்வார் என்று பார்த்திபன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கீர்த்தனா-அக்‌ஷய் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் பங்கேற்றார்கள்.

கீர்த்தனா-அக்‌ஷய் திருமணம் அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here