கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. இதுதான் ஒரே தீர்வு…

0
350

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில்தான் மக்கள் இடையே இந்த பேருந்து நிலையம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது இல்லை. கிளாம்பாக்கத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் காலையில் கோயம்பேடு உள்ளே வரும் பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கத்தோடு நிறுத்தும் முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.

புதிய பேருந்து நிலையம்: இந்த நிலையில்தான் ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, முடிச்சூரில் 28 கோடி ரூபாய் செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடம் அமைக்கப்படும் என CMDA தெரிவித்துள்ளது.

அதுவும் அடுத்த மாதமே இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது,​​கிளாம்பாக்கத்தில் 144 பார்க்கிங் இடங்களும், பேருந்துகள் இயக்க 100 பேருந்துகள் வசதி கொண்ட கொண்ட பேக்களும் உள்ளன, மேலும் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் பிரச்சினையை அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இதை கருத்தில் கொணடே.. கிளாம்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் முடிச்சூர் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க உள்ளனர். ஆம்னி பேருந்துகள் கட்டுப்பாடு: இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
விழிப்புணர்வு: இந்த பேருந்து நிலையம் குறித்து பல தவறான தகவல்கள் பரப்படுவதால் தமிழ்நாடு அரசு இதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த பேருந்து நிலையத்திற்கு எப்படி எளிதாக செல்வது, அந்த பேருந்து நிலையத்திற்கு செய்யப்பட்டு உள்ள பேருந்து வசதிகள் , ரயில் வழியாக எப்படி செல்வது என்பது உள்ளிட்ட விஷங்களை விழிப்புணர்வு பிரச்சாரம் போல செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here