krishna-jeyanthi-2019-gokhulashtami-krishna

0
1595

இன்று (ஆக.14) கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது. தசாவதாரத்தில் 9-வது அவதாரம் ஸ்ரீகிருஷ்ண அவதாரம். கிருஷ்ணர் பூமியில் அவதரித்த தினம் தான் கிருஷ்ண ஜெயந்தி. இது தென்னிந்தியாவில் கிருஷ்ணஜெயந்தி என்றும், வட இந்தியாவில் ஜென்மாஷ்டமி’ என்றும் அழைக்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி (சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி (कृष्ण जन्माष्टमी) ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி விழா சமயத்தில் விற்கப்படும் கிருஷ்ணர் சிலைகள்

மும்பையில் கோவிந்தாக்கள் தயிர்க்கலசத்தை எட்ட மனித நாற்கூம்பு அமைத்தல்

இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.

வட இந்தியாவில்

ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும் வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுக்கள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

கொண்டாட்டங்கள் :

வடஇந்தியாவில் கிருஷ்ணரின் இளமை காலத்தை, இளம் பெண்களுடன் இணைந்து நடித்து கொண்டாடுகின்றனர். மகாராஷ்டிராவில் சிறுவர்கள் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணெய்த்தாழியை, பிரமிடு கோபரம் அமைத்து அடிக்கின்றனர். தென்னிந்தியாவில் தேரோட்டம் மற்றும் உறியடி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கண்ணனை அழைத்தல் :

கண்ணனை வீட்டிற்கு அழைக்கும் விதமாக வீட்டில் கண்ணனின் பாதங்களை அரிசி மாவினால் வரைந்து அல்லது தன் வீட்டில் உள்ள சிறு குழந்தையின் பாதத்தை மாவில் நனைத்து பாதத்தை தரையில் பதிக்கின்றனர்.

தென்னிந்தியாவில்

தென்னிந்திய வீடு ஒன்றில் ஸ்ரீஜெயந்தி கொண்டாடப் படுகிறது.

  • தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
  • கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.
  • கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here