விஞ்ஞானிகள் மனித உடலில் புதிய ஒரு உறுப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள். இது மனித உடலின் நமது பார்வை புரிதலை மாற்றும். மருத்து குழு திரவம் நிரப்பபட்ட ஒரு தொகுப்பை கண்டறிந்து உள்ளது.
இதற்கு முன்பு அடர்ந்த, இணைப்பு திசுக்கள் அதிர்ச்சி உறிஞ்சிகளாக செயல்படக்கூடியது என எண்ணப்பட்டு வந்தது.
இன்டர்ஸ்டிசியம் (interstitium) எனப்படும் இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும், தோலின் மேல் அடுக்குக்கு கீழே இருக்கும் ஒரு’ நகரும் திரவத்தின் ஓட்டம் போல் இருக்கும். இந்த கோடுகள் போன்ற அமைப்பு செரிமான பாதை, நுரையீரல் மற்றும் சிறுநீரக அமைப்புகள் மற்றும் தமனிகளை சுற்றி நரம்புகள் மற்றும் தசை இடையே திசுப்படலம் “ஆகியற்றை சுற்றி உள்ளது என அந்த மருத்துவ அறிக்கை கூறுகிறது.
இந்த திரவ தொகுப்பு அமைப்பு உண்மையில் தனித்துவமான உறுப்பாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
உடலின் சில பகுதிகளுக்கு புற்றுநோய் பரவுவது எப்படி என்பதை இந்த குழு கண்டறியலாம், மேலும் விசாரணை நோய் கண்டறியவும் மற்றும் சிகிச்சைக்கான சிறந்த வழிமுறைகளை கண்டறியலாம்.
இந்த கண்டுபிடிப்பு மருத்துவத்தில் வியத்தகு முன்னேற்றங்களைத் தூண்டக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. இது போன்ற திரவத்தின் அமைப்பு ஒரு சக்தி வாய்ந்த கண்டறியும் கருவியாக மாறும் சாத்தியம் உள்ளது என கூறப்பட்டு உள்ளது.