வாக்காளர்கள்-1011418 ஆண்-498243

0
3299
thiruvannamalai
வாக்காளர்கள் : 1011418
ஆண் : 498243
பெண் : 513115
திருநங்கை : 60

இறுதி வேட்பாளர் பட்டியல் ————————— 1. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி – அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

2. சி.என்.அண்ணாதுரை – திராவிட முன்னேற்ற கழகம்

3. ஞானசேகரன்-அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

4. இரா.அருள் – மக்கள் நீதி மய்யம்

5. பா.பாபு – பகுஜன் சமாஜ் கட்சி

6. சி.காஸ்திரி- அகில இந்திய உழவர்கள் உழைப்பாளர்கள் கட்சி

7. இரா.ரமேஷ் பாபு – நாம் தமிழர் கட்சி

8. சா.அண்ணாதுரை – சுயேச்சை

9. ப.அண்ணாதுரை – சுயேச்சை

10.மு.அன்பழகன்- சுயேச்சை

11. பு.இந்திரமோகன் – சுயேச்சை

12. பி.எஸ்.உதயகுமார் – சுயேச்சை

13. மு.அய்யப்பன் – சுயேச்சை

14. சு.கருணா – சுயேச்சை

15. சு.கலைமணி – சுயேச்சை

16. ஆர்.கிருஷ்ணமூர்த்தி – சுயேச்சை

17. அ.கிருஷ்ணமூர்த்தி – சுயேச்சை

18. தி.சிவகுருராஜ் – சுயேச்சை

19. ம.படவேட்டான் – சுயேச்சை

20. க.ரகுநாதன் – சுயேச்சை

21. தி.ராஜேந்திரன் – சுயேச்சை

22. அ.விக்னேஷ்வரன் – சுயேச்சை

23. அ.விஜயன் – சுயேச்சை

24. ஆர்.வேலு – சுயேச்சை

25. டி.எஸ்.அண்ணாதுரை – சுயேச்சை வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலின் படி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 14,54,657 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,20,557. பெண் வாக்காளர்கள் 7,34,031. மூன்றாம் பாலினத்தினர் 69 பேர் உள்ளனர். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

ஜோலார்பேட்டை ………………….. 2,27,960 திருப்பத்தூர்……………………….. 2,25,866 செங்கம் (தனி)…………………….. 2,59,542 திருவண்ணாமலை………………….. 2,71,278 கீழ்பென்னாத்தூர்……………………. 2,41,521 கலசபாக்கம்………………………… 2,28,490 திருவண்ணாமலை என்றதும் அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலம்தான் அனைவரின் நினைவுக்கும் வரும். பஞ்சபூதங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நடைபெறும் கார்த்திகை மகாதீப விழா இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். கார்த்திகை மகா தீபத்தின்போது 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்களும் திருவண்ணாமலையில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமானது மாதத்தில் 2 நாட்கள் திருவிழாகோலமாக காட்சியளிக்கும். மேலும் திருவண்ணாமலை நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. அதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமம், சாத்தனூர் அணை, ஜவ்வாதுமலை ஆகியவையும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு சிறப்பு பெற்ற திருவண்ணாமலை 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்து தேர்தலை சந்தித்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் 1967-ல் திண்டிவனம் தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியாக இருந்தது. தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2009-ல் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் உருவானது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது 1996, 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த த.வேணுகோபால் வெற்றிபெற்றார். திருவண்ணாமலை தொகுதியாக மாறிய பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தி.மு.க.சார்பில் வேணுகோபால் மீண்டும் போட்டியிட்டார். அதில் அவர் 4,73,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஜெ.குரு என்கிற ஜெ.குருநாதன் 2,88,566 வாக்குகள் பெற்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வனரோஜா 5,00,751 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,32,125 வாக்குகள் பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள ஜோலார்பேட்டை, கலசபாக்கம் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றிபெற்று சமபலத்துடன் உள்ளன. தீர்க்கப்படாத பிரச்சினைகள் திருவண்ணாமலையில் இயங்கிவந்த டான்காப் கடலை எண்ணெய் ஆலை கடந்த 2002&ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுளள்ளனர். இந்த டான்காப் ஆலையை திறக்கவேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை ஆலையை திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. அதிலும் வானம்பார்த்த பூமியே அதிகம் இருப்பதால் வேர்க்கடலை அதிகமாக பயிரிடப்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன்கருதி டான்காப் ஆலையை திறக்கவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதேபோன்று திருவண்ணாமலை பஸ்நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு பவுர்ணமியின்போதும், கார்த்திகை தீபத்தின்போதும் நகருக்கு வெளியே தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப் பட்டு வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஒவ்வொரு பஸ்நிலையத்துக்கும் செல்வதில் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்துவருகிறது. இதற்காக பஸ்நிலையம் அமைக்க இடம்தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் நிதி ஒதுக்கியும் இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. திருவண்ணாமலை நகரில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் ஈசானிய பகுதியில் குவித்துவைக்கப்பட்டது. இதில் மர்ம நபர்கள் அடிக்கடி தீவைத்துவிடுகிறார்கள். கிரிவலப்பாதையில் இருப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்நிலை உள்ளது. திருவண்ணாமலையில் மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகட்டி பலஆண்டுகளாக வசித்துவருகிறாக்கள். இந்த குடியிருப்புகளுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவேண்டும், மின்இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. நேரடிப்போட்டி வருகிற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், தி.மு.க. சார்பில் சி.என்.அண்ணாதுரையும் போட்டியிடுகின்றனர். இதனால் திருவண்ணாமலை தொகுதியில் அ.தி.மு.க&தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்த வர். அரசியலில் நல்லஅனுபவம் பெற் றவர். தி.மு.க. சார்பில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர். எனவே அவர் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணியாற்றுவார். அதேநேரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை தொகுதியை அ.தி.மு.க. தக்கவைக்கவேண்டும் என்றநோக்கத்தில் களத்தில் இறங்குவார். எனவே திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் இந்த முறை பலத்தபோட்டி இருக்கும்.

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டை, கலசபாக்கம் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளன.

ஜோலார்பேட்டை (அ.தி.மு.க. வெற்றி) கே.சி.வீரமணி (அ.தி.மு.க.) ………….. 82,525 சி.கவிதா (தி.மு.க) ………………….. 71,534 ஜி. பொன்னுசாமி (பா.ம.க.) …………… 17,516 ஏ.பயாஸ்பாஷா (தே.மு.தி.க.) ………….. 3,509

திருப்பத்தூர் (தி.மு.க. வெற்றி) ஏ.நல்லதம்பி (தி.மு.க.) ……………….. 80,791 டி.டி.குமார் (அ.தி.மு.க.) ………………. 73,144 டி.கே.ராஜா (பா.ம.க.) ………………… 12,227 கே.அரிகிருஷ்ணன் (தே.மு.தி.க.) ……….. 3,968

செங்கம் (தனி) (தி.மு.க. வெற்றி) மு.பெ.கிரி (தி.மு.க.) ……………. 95,939 எம்.தினகரன் (அ.தி.மு.க.) …….. 83,248 சி.முருகன் (பா.ம.க.) …………….. 15,114 ஏ.கலையரசி (தே.மு.தி.க.) ……… 8,007

திருவண்ணாமலை (தி.மு.க. வெற்றி) எ.வ. வேலு (தி.மு.க.) ………………………1,16,484 பெருமாள்நகர் கே.ராஜன் (அ.தி.மு.க.) ………… 66,136 எல்.பாண்டியன் (பா.ம.க.) …………………… 7,916 எஸ்.மணிகண்டன் (தே.மு.தி.க.) …………….. 5,075

கீழ்பென்னாத்தூர் (தி.மு.க. வெற்றி) கு.பிச்சாண்டி (தி.மு.க.) …………………….99,070 கே.செல்வமணி (அ.தி.மு.க.) ……………….64,404 கோ.எதிரொலிமணியன் (பா.ம.க.) …………20,737 ஜோதி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) .. 4,613

கலசபாக்கம் (அ.தி.மு.க. வெற்றி) வி.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) …………. 84,394 ஜி.குமார் (காங்கிரஸ்) ………………………. 57,980 ஆர்.காளிதாஸ் (பா.ம.க.) …………………. 23,825 எம்.நேரு (தே.மு.தி.க.) ……………………… 9,932

வெற்றி யார் கையில்?

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரையில் தி.மு.க. சார்பில் த.வேணுகோபால் 5 முறை தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2014 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வனரோஜா வெற்றிபெற்றார். இதனால் திரு வண்ணாமலை தி.மு.க. கோட்டையாகவே இருந்து வருகிறது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற வனரோஜா, செங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மேல்ராவந்தவாடி என்ற கிராமத்தை தத்தெடுத்தார். ஆனால் அந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச் சாட்டு. பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். தேவையான இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு வசதிகள் செய்துகொடுத்துள்ளார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. மேலும் ஆவூர் பகுதியில் கோரைப்பாய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பெயர் சொல்லும் அளவுக்கு இந்த தொகுதியில் இதுவரை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் எந்தவித தொழிற்சாலையும் கொண்டுவரப்படவில்லை. தொடர்ந்து தி.மு.க. அதிகமுறை வெற்றிபெற்றுள்ள இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. தற்போது அ.தி.மு.க. சார்பில் அரசியல் அனுபவமிக்க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றிபெறுவது வேட்பாளர்களின் செயல்பாட்டை பொறுத்தே இருக்கும் என்று தொகுதி மக்கள் கூறுகின்றனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பேட்டியிட்ட ஆர்.வனரோஜா வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

ஆர்.வனரோஜா (அ.தி.மு.க.) ………….. 5,00,751 சி.என்.அண்ணாதுரை (தி.மு.க.) ……… 3,32,145 கோ.எதிரொலிமணியன் (பா.ம.க.) ….. 1,57,954 ஏ.சுப்ரமணியன் (காங்கிரஸ்) ……………. 17,854

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here