அறுவடைக்கு தயாரான நிலையில் காய்ந்து போன நெற் பயிர்கள்

0
3303

வாணாபுரம்,

கரும்பு, நெல், மக்காச்சோளம், எள், கேழ்வரகு, மணிலா மற்றும் காய்கறி பயிர்கள் தற்போது விவசாயிகள் பயிரிட்டு, அதனை பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாத்தனூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் வந்தது. இதனால் விவசாயிகள் நெற் பயிரிட்டனர். 3 மாத பயிரான நெற் பயிருக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படும். இதற்கிடையில் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் தண்ணீர் இல்லாமல் நெற் பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here